குவாரியில் முதியவர் சடலம் மீட்பு
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த கோபனப்பள்ளி பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில், 70 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் மிதப்பதாக, கோபனப்பள்ளி வி.ஏ.ஓ., முரளி, 39, கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். ஆனால் இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் குவாரி குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஸ் ஸ்டாண்ட் பணி முடிந்தும் திறக்காததால் பயணிகள் சிரமம்
-
சிவகாசி அரசு ஆதிதிராவிடர் கல்லுாரி மாணவிகள் விடுதிக்கு சொந்த கட்டடம் கட்டுவது எப்போது
-
திருவிளக்கு பூஜை
-
மனித உரிமைகள் டி.எஸ்.பி., அலுவலகத்தை எஸ்.பி., அலுவலகத்துக்குள் இடமாற்ற எதிர்பார்ப்பு
-
சாத்துாரில் போக்குவரத்திற்கு இடையூறாக பெட்டிக்கடைகள்
-
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
Advertisement
Advertisement