பள்ளி மாணவிகள் 2 பேர் மாயம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே மாயமான, இரு பள்ளி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் லாவண்யா,15; இவர் அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்,10ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதேபோல, ஏமப்பேர், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகள் சந்தியா,14; அதே பகுதி அரசு உயர்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 2 ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
-
செங்கோட்டை மட்டும் போதுமா? பதேபூர் சிக்ரி வேண்டாமா? பேராசை பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
-
சாலை பள்ளத்தில் தம்பதி பலியான விவகாரம்; ஒப்பந்ததாரர் 4 பேர் மீது வழக்கு
-
ஹிந்துக்கள் வெளியேற கனடாவில் காலிஸ்தான் பேரணி ; மோடியை கேலி செய்து சித்திரம்
-
சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை: ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்
Advertisement
Advertisement