தேவநாத சுவாமி கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம்

கடலுார்; கடலுார் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் சித்திரை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவம் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம்.

இந்தாண்டு சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீதேவி, பூ தேவியுடன் தேவநாத சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின், மங்கள வாத்தியத்துடன் கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது.

வரும் 7ம் தேதி வேணுகோபாலன் சேவையில் தங்க விமானத்திலும், தங்க பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வரும் 16ம் தேதி விழா நடக்கிறது.

Advertisement