கோப்பை வென்றது இந்தியா: மாற்றுத்திறனாளி 'டி-20' கிரிக்கெட்டில்

பெங்களூரு: மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' தொடரை இந்திய அணி 5-0 என கைப்பற்றியது
.
பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'டி-20' கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. முதல் நான்கு போட்டியில் வென்ற இந்தியா, ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.

ஐந்தாவது போட்டியில் முதலில் 'பேட்' செய்த இந்திய அணி, 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன் எடுத்தது. கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி 15 ஓவரில், 88 ரன்னுக்கு சுருண்டு 103 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு கோப்பையுடன் ரூ. 2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இலங்கை அணிக்கு கோப்பையுடன், ரூ. 50 ஆயிரம் பரிசாக வழங்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் நரேந்திர மாங்கூர் வென்றார். தொடர் நாயகன் விருதை இந்தியாவின் ரவிந்திர சான்டே கைப்பற்றினார்.

Advertisement