சென்னை அணியில் உர்வில் படேல்

சென்னை: சென்னை அணியில் காயத்தால் விலகிய வன்ஷ் பேடிக்கு பதிலாக உர்வில் படேல் ஒப்பந்தமானார்.
பிரிமியர் லீக் 18வது சீசனுக்கான சென்னை அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் வன்ஷ் பேடி 22, இடம் பெற்றிருந்தார். இவரது இடது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால், ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில் பிரிமியர் தொடரில் இருந்து பாதியில் விலகினார். இவருக்கு பதிலாக குஜராத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்டர் உர்வில் படேல் 26, அடிப்படை ஏலத்தொகையான ரூ. 30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு திரிபுராவுக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபியில், 28 பந்தில் சதம் விளாசிய உர்வில் படேல் (குஜராத்), 'டி-20' அரங்கில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தை அபிஷேக் சர்மாவுடன் பகிர்ந்து கொண்டார். கடந்த 2023ல் நடந்த பிரிமியர் தொடரில் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதுவரை 42 'டி-20' போட்டியில் (1162 ரன், 2 சதம், 4 அரைசதம்) விளையாடி உள்ளார்.
மேலும்
-
அடிப்படை வசதியே இல்ல... 'ஆதார்' எதற்கு?கலெக்டர் ஆபீசில் தரையில் வீசிய மக்கள் ஈரோடு:சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று ஆதார் கார்டுகளை தரையில் வீசி, போராட்டத்தில் ஈடுபட்டு, மனு வழங்கி கூறியதாவது: ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.என்.புதுார் அருகே சூரியம்பாளையம் பகுதியில் அன்னை தெரசா நகரில், 18 ஆண்டுக்கு மேலாக அடிப்படை வசதியின்
-
பட்டா மாற்றத்தில்தொடரும் ஏமாற்றம்
-
'சுடுகாடு நிலம் ஆக்கிரமிப்பு'
-
'மின் மயானம் வேண்டாம்' குறைதீர் கூட்டத்தில் மனு
-
கிணற்றில் நீச்சல் அடித்தபோதுபுரையேறி 9 வயது சிறுவன் பலி
-
கொடிக்கம்பம் அகற்ற எதிர்ப்புசி.ஐ.டி.யு.,வினர் வாக்குவாதம்