பாகம்பிரியாள் கோயிலில் திருக்கல்யாணம்

திருவாடானை: சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவெற்றியூரில் உள்ள பாகம்பிரியாள் கோயிலில் நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. வல்மீகநாதர், பிரியாவிடையுடன், பாகம்பிரியாள் அம்மன் திருமண அலங்காரத்தில் காட்சியளித்தனர். மணிகண்டன்குருக்கள், வல்மீகநாதகுருக்கள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. தேவஸ்தான செயல் அலுவலர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.
மே 9 ல் தேரோட்டம், மறுநாள் தீர்த்தவாரி நடைபெறும். விழா நாட்களில் வெள்ளி ரிஷபம், நந்தி சிம்மம், வெட்டுங்குதிரை, காமதேனு போன்ற வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
மேலும்
-
குழந்தைகள் பாதுகாப்பு : கலெக்டர் உத்தரவு
-
கர்நாடகாவில் 3 இடங்களில் போர்க்கால ஒத்திகை இன்று! போர் துவங்கினால் தப்புவது குறித்து பயிற்சி
-
பயங்கரவாதிகளுக்கு அதிகாரம் நளின்குமார் கட்டீல் காட்டம்
-
மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
-
மக்களுடன் முதல்வர் முகாம்: கலெக்டர் ஆலோசனை
-
சென்னப்பட்டணாவுக்கு கூடுதல் நிதி: சிவகுமார்