கூவாகம் திருவிழா: எஸ்.பி., ஆய்வு
உளுந்துார்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி., நேரில் ஆய்வு செய்தார்.
உளுந்துார்பேட்டை தாலுகா, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது.
அதற்கு முன்னதாக 13 ம் தேதி திருநங்கைகள், பக்தர்கள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த திருவிழாவில், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் திருவிழாவை அசம்பாவிதங்கள் இன்றி, அமைதியாக நடத்துவது குறித்தும், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எடுப்பது குறித்தும் எஸ்.பி. ரஜத்சதுர்வேதி நேற்று மாலை 6:00 மணிக்கு, கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். அப்போது திருநாவலுார் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தாக்குதல் நடத்தியது ஏன்: ஐ.நா., பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகளிடம் இந்தியா விளக்கம்
-
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தது நியாயமானது: பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக்
-
தேச விரோத பிரசாரங்கள் மீது நடவடிக்கை: அமித்ஷா அறிவுறுத்தல்
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம்; சுற்றுலா பயணிகளுக்கு என்.ஐ.ஏ., வேண்டுகோள்!
-
பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்
-
நெஹ்ரா, பாண்ட்யாவுக்கு அபராதம்
Advertisement
Advertisement