உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமைகளில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு தாலுகாவிலும், கலெக்டர் கலைச்செல்வி தங்கி ஆய்வு நடத்தி வருகிறார்.
மே மாதத்திற்கான, 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமிற்கு, வாலாஜாபாத் தாலுகா தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் தாலுகாவில், வரும் 15 ல், கலெக்டர் கலைச்செல்வி பல்வேறு அரசு அலுவலகங்களிலும், அரசு திட்டங்களையும் ஆய்வு செய்ய உள்ளார். வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில், மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை, பொதுமக்களிடம் மனு பெற உள்ளார்.
வாலாஜாபாத் தாலுகாவைச் சேர்ந்தவர்கள், தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement