நாமகிரிப்பேட்டையில் ஆலங்கட்டி மழை

நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில், நேற்று மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு, 7:30 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது. அப்போது, வீட்டு கூரை, ஜன்னல்களில் கற்கள் விழுவதுபோல் சத்தம் வரத்தொடங்கியது. பொதுமக்கள் வெளியே வந்து பார்த்தபோது, மழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

நாமகிரிப்பேட்டை மட்டுமின்றி, அரியா
கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, சீராப்பள்ளி, மூலப்பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால், மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement