திருப்புறகோவில் சாலை சேதம் சீரமைக்க கிராமத்தினர் கோரிக்கை

பவுஞ்சூர்:கடுமையாக பழுதடைந்துள்ள, திருப்புறக்கோவில் கிராமத்திற்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பவுஞ்சூர் அடுத்த திருப்புறக்கோவில் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

செய்யூர் - பவுஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து திருப்புறக்கோவில் கிராமத்திற்குச் செல்லும் தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலை பழுதடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதால், தினமும் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.

எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருப்புறக்கோவில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement