மின்தடையால் அவதி படந்தாலில் சாலை மறியல்
சாத்துார்: சாத்துார் படந்தால் ஊராட்சிக்குட்பட்ட மருதுபாண்டியர் நகரில் நேற்று முன்தினம் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை சூறாவளி, இடி மின்னலுடன் பெய்த மழையில் மருதுபாண்டியர் நகர் முனியசாமி கோயில் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது வேப்ப மரம் முறிந்து விழுந்தது.
இதனால் அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்தடை ஏற்பட்டது.நேற்று மாலை 6:30 மணி வரை மின்தடை சரி செய்யப்படவில்லை.இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் சாத்துார் தாயில்பட்டி சாலையில் சாலை மறியல் செய்தனர்.
போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள்கலைந்து சென்றனர்.பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் மின்சார வாரியத் துறையினர் ஈடுபட்டனர்.இரவு 8:00 மணி வரை அப்பகுதியில் மின்சாரம் வராததால் மக்கள் அவதிப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் சொல்வது பொய்; மறுத்தது ஆப்கன் அரசு!
-
முப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்: இந்தியா
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
-
போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்
Advertisement
Advertisement