பிரக்ஞானந்தா-குகேஷ் 'டிரா'

புக்காரெஸ்ட்: குகேஷ், பிரக்ஞானந்தா மோதிய கிராண்ட் செஸ் தொடரின் முதல் சுற்று 'டிரா' ஆனது.
கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் நடக்கும் 6 தொடர் முடிவில், புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பெறும் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம். இதன் இரண்டாவது தொடர் ருமேனியாவில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்காவின் சோ வெஸ்லே, பேபியானோ காருணா உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
முதல் சுற்றில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மோதினர். குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார். துவக்கத்தில் சமபலத்தில் விளையாடினர். 18 வது நகர்த்தில் குகேஷ் முந்தினார். பின் பிரக்ஞானந்தா மீண்டு வந்தார். முடிவில் 35 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
முதல் சுற்று முடிவில் வெஸ்லே (1.0), பிரான்சின் அலிரேசா (1.0), காருணா (0.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (0.5), குகேஷ் (0.5) 7, 8வது இடத்தில் உள்ளனர்.
மேலும்
-
தந்தி மாரியம்மன் கோவிலில் விடையாற்றி உற்சவம்
-
தாவரவியல் பூங்கா அருகே நாயை கவ்வி சென்ற சிறுத்தை; 'கிளன்ராக்' பகுதி குடியிருப்பு வாசிகள் 'பீதி'
-
93.97 சதவீதம் பேர் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி; 20 பள்ளிகள் 'சென்டம்'
-
பாக்., தாக்குதல் எதிரொலி; தலைநகர் டில்லிக்கு உச்சபட்ச பாதுகாப்பு
-
காரில் குட்கா கடத்திய 4 பேர் ஸ்ரீமுஷ்ணத்தில் கைது
-
மத போதகர் ஜாமின் மனு போலீஸ் பதிலளிக்க உத்தரவு