வேகத்தடைகளுக்கு வெள்ளை கோடு; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை 

உடுமலை; பல்லடம் மாநில நெடுஞ்சாலையிலுள்ள வேகத்தடைகளில், வெள்ளைக்கோடுகள் அமைக்கும் பணி, நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், குடிமங்கலம் நால்ரோட்டில் இருந்து வாவிபாளையம் வரை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.

இப்பகுதியில் விபத்துகளை தவிர்க்க, வேகத்தடை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், வேகத்தடைகளில் இருந்த வெள்ளை நிற கோடுகள் மங்கி, வாகன ஓட்டுநர்கள் திணறி வந்தனர்.

தற்போது அனைத்து வேகத்தடைகளிலும், வெள்ளை நிற கோடுகளும், இதர எச்சரிக்கை குறியீடுகளும் அமைக்கும் பணிகள் மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement