பெட்ரோல், எல்.பி.ஜி., தட்டுப்பாடு இல்லை: இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டவட்டம்

1


புதுடில்லி: பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., எந்த தட்டுப்பாடும் இன்றி விநியோகம் செய்யப்படுகிறது என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.


இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., எந்த தட்டுப்பாடு இல்லை என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் கூறியிருப்பதாவது: எல்லா மையங்களிலும் எரிபொருள் கிடைக்கும். நாடு முழுவதும் எரிபொருள் கையிருப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட வேண்டாம்.

பெட்ரோல், டீசல் மற்றும் எல்.பி.ஜி., எந்த தட்டுப்பாடும் இன்றி விநியோகம் செய்யப்படுகிறது. போதுமான அளவு இருப்பு உள்ளது. சீரான விநியோகம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement