தமிழ் வளர்ச்சி துறை போட்டி மாணவ, மாணவியருக்கு பரிசு



ஈரோடு, தமிழ் வளர்ச்சி துறை சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, செம்மொழி நாள் விழாவுக்கான, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான கட்டுரை, பேச்சு போட்டி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளராக முனைவர் சிவகாமி, உதவி அலுவலர் வெண்ணிலா செயல்பபட்டனர்.

கட்டுரை போட்டியில் சென்னிமலை கொமரப்பா செங்குந்தர் மகளிர் உயர்நிலைப்பள்ளி வெ.மோனிஷா, நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி க.மேகவர்ஷினி, ஈரோடு வி.வி.சி.ஆர்.முருகேசனார் செங்குந்தர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மு.அனிஷாபானு; பேச்சு போட்டியில், திண்டல் வேளாளர் மெட்ரிக் அ.பஹ்மிதா தஸ்னீம், தாசப்பகவுண்டன்புதுார் அரசு மேல்நிலைப்பள்ளி ரா.பிரேம்குமார், ஈரோடு, கருங்கல்பாளையம் அல் அமீன் மேல்நிலைப்பள்ளி அ.சனாபாத்திமா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். இரு பிரிவிலும் பரிசுகளாக தலா, 10,000 ரூபாய், 7,000 ரூபாய், 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.
கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை மற்றும் பேச்சு போட்டி, இன்று காலை, 9:00 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

Advertisement