பிளாஸ்டிக் குப்பை எரிப்பு வாகன ஓட்டிகள் அவதி

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில்- ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் அருகில் கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குப்பைக்கு மர்ம நபர்கள் நேற்று காலை தீ வைத்து சென்றனர்.

தீ மளமளவென பரவி கரும்புகை அதிகளவில் வெளியேறியது. இதை கண்ட வாகன வாகன ஓட்டிகள் மறைமலை நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின் வானக ஓட்டிகள் நிம்மதியடைந்தனர்.

Advertisement