ஆம்னி பஸ் மோதி முதியவர் பலி
ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து, சென்னை பதிவெண் கொண்ட நேஷனல் ஆம்னி பஸ், சத்தி சாலையில் சித்தோடு நோக்கி கடந்த, 11ம் தேதி இரவு சென்றது. கனிராவுத்தர் குளத்தை கடந்து தண்ணீர்பந்தல்பாளையம் அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட முதியவர் இறந்தார்.
வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணையில், இறந்த முதியவருக்கு, 60 வயது இருக்கும். யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement