சாலைப் பணியாளர்கள் ஜூன் 12ல் போராட்டம்

திண்டுக்கல்:ஜூன் 12ல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக சாலைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் முருகேசன் வரவேற்றார். 2002ல் பணிநீக்கப்பட்ட சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் 5 மாதங்களாக காலம் தாழ்த்துவதோடு மேல்முறையீடு செய்ய முயன்று வருகிறது. இதை கண்டித்து ஜூன் 12ல் மாநிலம் முழுவதும் அனைத்து கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத் தலைவர்கள் மகேந்திரன், பழனிசாமி, ரவி, ராஜமாணிக்கம், பொருளாளர் தமிழ், பொதுச்செயலாளர் அம்சராஜ் கலந்து கொண்டனர்.

Advertisement