நடந்து சென்றவர் மீது மோதாமல் தவிர்த்த லாரி டிரைவர் பலி
துாத்துக்குடி:நடந்து சென்றவர் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததால், டிப்பர் லாரி கவிழ்ந்ததில் டிரைவர் உயிரிழந்தார்.
துாத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 24, லாரி டிரைவர். இவர், நேற்று காலை, துாத்துக்குடி துறைமுக சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கில், புண்ணாக்கு மூட்டைகளை இறக்கிவிட்டு, டிப்பர் லாரியில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர் மீது மோதாமல் இருப்பதற்காக, வேல்முருகன் திடீரென பிரேக் பிடித்தார்.
இருப்பினும் அவர் மீது லேசாக மோதிய லாரி, சாலையில் கவிழ்ந்தது.இதில், சம்பவ இடத்திலேயே வேல்முருகன் உயிரிழந்தார். நடந்து சென்ற போது காயமடைந்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் யாதவ், 35, சிகிச்சை பெறுகிறார். தெர்மல்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை சிறப்பாக இருந்தது: ஊட்டியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
-
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று துவக்கம்
-
6,000 பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அதிரடி
-
பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்புக்கான மக்களை 'பதம் பார்க்கும்' தீர்மானம்! வைப்புத்தொகை, மாத கட்டணம் உயர்கிறது; தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் 'கப் - சிப்'
-
பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு
-
தமிழகத்தில் நான்கரை மாதங்களில் நாய்க்கடியால் 2.16 லட்சம் பேர் பாதிப்பு
Advertisement
Advertisement