மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் தீ: பெண்கள், குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

1

மும்பை: மஹாராஷ்டிராவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.


மஹாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தின் அகால்கோட் சாலையில் ஜவுளி தொழிற்சாலை ஒன்று உள்ளது. இன்று ( மே 18) அதிகாலை 3:45 மணிக்கு இந்த தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


இந்த விபத்தில் தொழிற்சாலையின் உரிமையாளர் ஹாஜி உஸ்மான் மன்சுரி மற்றும் அவரது 3 குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தனர். அதில் 1.5 வயது குழந்தையும் அடக்கம். மேலும் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்களும் பலியாகினர்.


தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், சுமார் 5 முதல் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement