சீமான் வசைபாடாத ஆட்களை வாழ்த்துவோம்

'வருமுன் காப்போம்' என்பது போல், தவறு நடக்கும் முன்பு நடவடிக்கை எடுப்பது ஒரு புறமும்; தவறு நடந்து விட்டபின், அதன் மீது கடும் நடவடிக்கை எடுப்பது இன்னொரு புறம் என, தொடர்ந்து தமிழக அரசு எல்லா விஷயங்களுக்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த கட்சியை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னையில் அதிகாரிகளுடன் இரண்டு கவுன்சிலர்கள் சண்டையிட்டனர். அது தெரிந்ததும், அவர்களை பணியை விட்டு நீக்கியவர் நம் முதல்வர்.

தமிழக பா.ஜ., முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு மீடியா மேனியா உள்ளது. அதனால், மைக்கை கண்டால், ஏதாவது பேசுவார். அதுவும், தி.மு.க.,வைப் பற்றி பேசச் சொன்னால், மணிக்கணக்கில் எதையாவது பேசுவார்.

சீமான், வசைபாடாத ஆட்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள். அவர்களை நாம் வாழ்த்துவோம்.

- சேகர்பாபு,

தமிழக அமைச்சர்

Advertisement