பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர்; பி.எஸ்.என்.எல்.,ல் ஊதிய மாற்ற பிரச்னைக்கு உடனடி தீர்வு, 2வது வி.ஆர்.எஸ்., திட்டத்தை கைவிடுவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

என்.எப்.டி.இ., மாவட்ட செயலார் சம்பத்குமார் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் பேசினார். நிர்வாகிகள் அஷஅரப்தீன், கணேசமூர்த்தி ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement