மலேசிய பாட்மின்டன்: காலிறுதியில் ஸ்ரீகாந்த்

கோலாலம்பூர்: மலேசிய பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீகாந்த் முன்னேறினார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், 'சூப்பர் 500' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அயர்லாந்தின் நாட் நுயென் மோதினர். ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரனாய் 9-21, 18-21 என ஜப்பானின் யுஷி டனகாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன் 14-21, 16-21 என பிரான்சின் கிறிஸ்டே போபோவிடம் வீழ்ந்தார்.
கலப்பு இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-17, 18-21, 21-15 என பிரான்சின் ஜூலியன் மாயோ, லியா பலேர்மோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடிக்கு ராகுலின் 3 கேள்விகள்!
-
நக்சல் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறித்துவிட்டோம்: சத்தீஸ்கர் முதல்வர் பெருமிதம்
-
ஆயுஷ் மாத்ரே, வைபவ் வாய்ப்பு: இந்திய ஜூனியர் அணியில்
-
துணிச்சலாக செயல்பட்ட வீரர்கள் 33 பேருக்கு வீரதீர விருது வழங்கி கவுரவிப்பு;விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி பெருமிதம்!
-
இங்கிலாந்து அணி ரன் குவிப்பு: டக்கெட், கிராலே, போப் சதம்
-
கோவில்கள் மறக்கப்பட வேண்டிய இடமல்ல; நினைவில் வைக்க வேண்டிய இடம்: கவர்னர்
Advertisement
Advertisement