அரசு பள்ளிகளில் பிளஸ் 1 சேர மாணவர்கள் ஆர்வம்

புதுச்சேரி : அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்காக ஏராளமான மாணவர்கள் குவிந்தனர்.
புதுச்சேரி கல்வித்துறை சார்பில், வரும் கல்வி ஆண்டில் பிளஸ் 1 சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி கடந்த 19ம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்திய அரசு பள்ளிகளில் நடந்து வருகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணியும் நடந்து வருகிறது. இன்றுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவடைகிறது. அதையடுத்து, பள்ளிகளில் நாளை மெரிட் லிஸ்ட் ஒட்டப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் சேர்க்கை நடைபெறும் என கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதையொட்டி புதுச்சேரி அரசு பள்ளிகளில் சேர்க்கைக்காக விண்ணப்பங்களை வழங்குவதற்கு ஏராளமான மாணவ, மாணவிகள் குவிந்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
-
யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
-
உலக நாடுகள் பாராட்டும் ஆபரேஷன் சிந்தூர்; உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
-
நாடு முழுவதும் வேகம் எடுக்கும் கொரோனா தொற்று
-
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கொலை மிரட்டல்; கோவை கமிஷனரிடம் புகார்!
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு சிறை தண்டனை
Advertisement
Advertisement