வைப்பூரில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து கையாள வேண்டுகோள்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சியில், வைப்பூர், கூழாங்கல்சேரி, வஞ்சுவாஞ்சேரி, வெள்ளேரித்தாங்கல், காரணித்தாங்கல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக், குப்பை கழிவை, ஊராட்சி துாய்மை பணியாளர்கள் வாயிலாக நாள்தோறும் அகற்றப்படுகின்றன.
அவ்வாறு சேகரமாகும் குப்பை, பேரீஞ்சம்பாக்கம் செல்லும் சாலையோரம் கொட்டி தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், பேரீஞ்சம்பாக்கம் செல்லும் மக்கள், புகை மற்றும் துர்நாற்றத்தால் அவதி அடைந்து வருகின்றனர்.
திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பை கழிவை உண்ணும் கால்நடைகளுக்கு நோய் வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், அப்பகுதி முழுதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே, ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையை, தரம் பிரித்து கையாள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
பனிப்பொழிவால் ஏற்காடு 'ஜிலுஜிலு'; பயணிகள் 'குளுகுளு' கண்காட்சியில் நெகிழ, ரசிக்க, வியக்க வைத்த நாய்கள்
-
2 பெண்களுக்கு வரதட்சனை கொடுமை: 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு
-
தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
-
எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதலுக்கு பட்டுவாடா
-
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டட கட்டுமான பணி தீவிரம்
-
கலிக்கம் கண் சிகிச்சை முகாம்