சென்னிமலையை தாலுகாவாக அறிவிக்க கம்யூ தீர்மானம்

சென்னிமலை: இ.கம்யூ., கட்சியின், சென்னிமலை ஒன்றிய, 36-வது மாநாடு சென்னிமலையில் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் நைனாமலை கொடியேற்றினார். நகர செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். மாநில துணை செயலாளர் பெரியசாமி மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார்.


புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஒன்றிய செயலாளராக செங்கோட்டையன், துணை செயலாளர்களாக கண்ணுசாமி, ரவி, ஒன்றிய பொருளாளராக பொன்னுசாமி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட துணை செயலாளர் சின்னசாமி நிறைவுரை ஆற்றினார். பெருந்துறை தாலுக்காவில் இருந்து பிரித்து, சென்னிமலையை தனித் தாலுகாவாக அறிவிக்க வேண்டும். சென்னிமலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement