கோவையில் அதிகபட்சமாக வால்பாறையில் 54 மி.மீ., மழை

கோவை : கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னகல்லாறு பகுதியில் 54 மி.மீ., மழை பதிவாகியது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை சற்று முன்னதாக துவங்கியது. முதல் நாளே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், கன மழை கொட்டியது. குறிப்பாக, கோவையில் பல்வேறு பகுதியில் பரவலாக நேற்று முன்தினம் முதல், மழை பெய்து வருகிறது.
ஒரு சில இடங்களில் கனமழை பெய்கிறது. அதிக காற்று வீசியதில் சில இடங்களில் மரங்கள் விழுந்தன. இந்நிலையில், கோவையில் அதிகபட்சமாக வால்பாறை, சின்ன கல்லாறு பகுதியில், 54 மி.மீ., சோலையாறு, பி.ஏ.பி., பகுதிகளில் 34 மி.மீ., மழை கொட்டியது.
அடுத்தப்படியாக, பேரூர், சிறுவாணி அடிவாரத்தில் 22 மி.மீ., பொள்ளாச்சியில் ஒரு சில இடங்களில் 15மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் சராசரியாக 13.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது.