குப்பைக்கு தீ வைப்பால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர்: கரூரில், சாலையோரம் குப்பைக்கு தீ வைப்பதால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகள் மூச்சு திணறி செல்கின்றனர்.
கரூர் நகரை சுற்றி திருச்சி, கோவை, ஈரோடு, திண்டுக்கல் மற்றும் சேலம் சாலைகள் செல்கின்றன. கரூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், டீ கடைகள் உள்ளிட்டவற்றிலிருந்து வெளியேறும் குப்பை கழிவுகளை, ஆங்காங்கே நெடுஞ்சாலை-யோரம் கொட்டி வருகின்றனர். இதில், சுக்காலியூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை குவிந்து கிடக்கிறது. காற்று வீசும்போது சாலையில் குப்பை பறக்கிறது.
மேலும், குப்பையை தீயிட்டு கொளுத்தி விடுகின்றனர். தீ வைத்து எரிக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. குப்-பையை எடுத்து செல்வதற்கு பதிலாக, சாலையோரம் குவித்து எரித்து விடுகின்றனர்.
புகையால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்-சலால் கஷ்டப்படுகின்றனர். சாலையில் கொட்டப்படும் குப்-பையை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement