பவானிசாகர் நீர்மட்டம் 'கிடுகிடு' நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்வு
பவானிசாகர், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. பில்லுார் அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் பவானி ஆறு வழியாக அணையை வந்தடைகிறது.
நேற்று அணை நீர்வரத்து, 18 ஆயிரத்து, 461 கன அடியாக இருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம், 75.57 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 13.4 டிஎம்சி ஆக உள்ளது. அதாவது நேற்று முன்தினம், ௨.௫ அடி உயர்ந்த நிலையில், நேற்று ஒரே நாளில், ௩ அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கில வழி மாணவர்களுக்கு அரசு திட்டங்கள் கைவிரிப்பு
-
அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடக்கிறது
-
கேலோ இந்தியா இளையோர் போட்டி தங்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
-
புத்தேரி பெருமாள் கோவிலில் அக்னி நட்சத்திர நிவர்த்தி பூஜை
-
கொத்தடிமையாக இருக்கிறோம் கூலித்தொழிலாளி எஸ்.பி.,யிடம் புகார்
-
மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி கடலுார் மாணவி மூன்றாமிடம்
Advertisement
Advertisement