கார்பெண்டர் தற்கொலை

அரியாங்குப்பம்; மது குடித்ததை கண்டித்ததால் கார்பெண்டர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி, 59; கார்பெண்டர்.

இவர், மது குடித்து வந்ததை, வீட்டில் இருந்தவர்கள் கண்டித்தனர். அதில், மனமுடைந்த அவர் கடந்த 26ம் தேதி, பூச்சி மருந்து குடித்தார்.

மயக்கமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement