அமெரிக்காவிற்கு ஐபோன் ஏற்றுமதி: சீனாவை முந்தியது இந்தியா

புதுடில்லி: அமெரிக்காவிற்கு ஐபோன்களை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முந்தியுள்ளது.
அமெரிக்கா - சீனா இடையே நடக்கும் வர்த்தக போர் நடந்து வருகிறது. இதன் காரணமாக சீனாவில் ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்ற ஆப்பிள் நிறுவனம் முயற்சி திட்டமிட்டு உள்ளது. அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் அனைத்து ஐபோன்களையும் இந்தியாவில் தயாரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கு, அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் ஆண்டுதோறும் 22 கோடி ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்களின்படி, அமெரிக்காவிற்கு அதிக ஐபோன்களை ஏற்றுமதி செய்யப்படும் நாடுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முந்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த வரையிலான கணக்கில் இந்தியாவில் இருந்து 30 லட்சம் ஐபோன்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், சீனாவில் இருந்து 9 லட்சம் ஐபோன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
மேலும்
-
அரசு பஸ் மீது மோதிய கார் ஆந்திராவை சேர்ந்தவர் பலி
-
மாகடி, குனிகல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு டயர்களுக்கு தீவைத்து விவசாயிகள் போராட்டம்
-
தென்காசி நகை கடைக்காரரிடம் ரூ.20 லட்சம் பறித்த 4 பேர் கைது
-
ரூபாவுக்கு பதவி உயர்வு
-
சொத்து சேர்த்த 7 அரசு அதிகாரிகள் வீடுகளில் லோக் ஆயுக்தா ரெய்டு
-
கமல் படம் 'ரீ ரிலீஸ்' கிடையாது தயாரிப்பாளர் மஞ்சு திட்டவட்டம்