நாளை தி.மு.க., பொதுக்குழு கூட்டம்; மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மதுரை: தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று (மே 31) மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினை, விமான நிலையத்தில் அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி வரவேற்றனர்.
மதுரையில் நாளை (ஜூன் 1) முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் பிரமாண்டமாக நடக்கிறது. இதில் பங்கேற்க இன்று மதியம் 1:05 மணிக்கு விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் பெரியசாமி, நேரு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, சாத்துார் ராமச்சந்திரன், தியாகராஜன், எம்.பி., டி.ஆர்., பாலு, மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள் அளித்த வேஷ்டி, சால்வையை ஸ்டாலின் பெற்றுக் கொண்டார். இன்று மாலை முதல்வர் பங்கேற்கும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடக்கிறது. முடிவில், முன்னாள் மேயர் முத்து சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார்.




மேலும்
-
பொது மக்கள் முயற்சியால் எட்டு நாட்களுக்கு பின் சீரான மின் சப்ளை மகிழ்ச்சியில் குட்டியாறுவாலி மக்கள்
-
சீன 'காந்தப்புயலில்' சிக்கிய மின்சார வாகன துறை
-
போலீஸ் செய்திகள்: தேனி மாவட்டம்
-
ரயில்வே ஸ்டேஷனில் அலைமோதிய கூட்டம்
-
மாணவர்கள் பள்ளி செல்ல டூவீலர் வழங்கினால் பெற்றோர் மீது நடவடிக்கை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை
-
மாவட்டத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பு