ஆப்பரேஷன் சிந்துாரில் நம் ராணுவம் அடிச்சது 9 இல்ல 16; சொல்வது நாம் அல்ல பாகிஸ்தான்

புதுடில்லி,: 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவத் தரப்பில் கூறப்பட்டதைவிட அதிக இடங்களை பாகிஸ்தான் இழந்துள்ளதாக அந்நாட்டு ஆவணங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம் ராணுவம் தரைமட்டமாக்கியது.
பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் - -இ- - முகமது தலைமையகம் மற்றும் முரித்கேவில் உள்ள லஷ்கர்- - இ- - தொய்பா பயிற்சி மையம் உட்பட ஒன்பது இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆப்பரேஷன் சிந்துார் குறித்து நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவம் மற்றும்
விமானப்படை அதிகாரிகள் விளக்கமளித்தனர். தாக்குதல் மற்றும் சேதம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக, 'ஆப்பரேஷன் பன்யான் உன் மர்சூஸ்' என்ற பெயரில் பாக்., ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், நம் ராணுவத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதல் பகுதிகள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயங்கரவாதிகள் இருந்த பஹவல்பூர், முரித்கே உள்ளிட்ட ஒன்பது இடங்களைத் தாண்டி மேலும் ஏழு இடங்களில் நம் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
அங்குள்ள பெஷாவர், ஜாங், சிந்துவில் உள்ள ஹைதராபாத், பஞ்சாபில் உள்ள குஜராத், பவால்நகர், அட்டாக் மற்றும் சோர் ஆகிய பகுதிகளில் கூடுதலாக தாக்குதல் நடத்தப்பட்டதாக படங்களுடன் அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக மிக கடுமையான தாக்குதலை நம் ராணுவம் நடத்தியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆப்பரேஷன் சிந்துாரை தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்புகளில், பெஷாவர், அட்டாக் உள்ளிட்ட ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தியது குறித்து விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
தற்போது பாகிஸ்தான் வெளியிட்ட ஆதாரங்கள் வாயிலாக குறிப்பிட்டதை விட, அதிக இடங்களை நம் ராணுவம் தாக்கியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.










மேலும்
-
புதர் மண்டி காணப்படும் பாசன வாய்க்கால்கள் துார்வார நிதி ஒதுக்க கோரிக்கை
-
அயோத்தியில் கோலாகலமாக நடந்தது ராம தர்பார் பிராண பிரதிஷ்டை
-
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான நெருக்கடியை அரசால் மட்டும் தீர்க்க முடியாது: ஸ்டாலின்
-
எல்லையம்மன் கோவில் தெரு வடிகால்வாய் பணிக்காக மூடல்
-
நிழற்கூரைகளில் சோலார் அமைப்பு பயணியர் கோரிக்கை
-
அரசு விடுதியில் தங்கி படிக்கலாம்; விண்ணப்பிக்க மாணவருக்கு அழைப்பு