நெடுஞ்சாலையில் வளர்ந்த முள்செடிகளால் கடும் அவதி

திருவாலங்காடு:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே நாராயணபுரம் கூட்டுச்சாலை உள்ளது. இந்த கூட்டுச்சாலை - பட்டரைபெரும்புதூர் வரை, 10க்கும் மேற்பட்ட இடங்களில், சாலையோரங்களில் கருவேல செடிகள் வளர்ந்துள்ளன.
இந்த கருவேல செடிகள் சாலை வரை நீண்டுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகளின் ஆடைகளை கிழிப்பதோடு, முகம் மற்றும் கண்களை பதம்பார்க்கிறது.
எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளை காயப்படுத்தும் வகையில், சாலையோரம் வளர்ந்துள்ள கருவேல செடிகளை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement