மனைவிக்கு சூடு வைத்த சந்தேக கணவன் கைது

கும்மிடிப்பூண்டி:பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 28. இவர், புதுகும்மிடிப்பூண்டியில், மனைவி புதுால், 27, இரண்டு பிள்ளைகளுடன் தங்கி, கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், புதுாலுக்கு, வடமாநில கட்டட தொழிலாளி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை ரஞ்சித்குமார் கண்டித்தும் புதுால் கேட்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித்குமார், சில தினங்களாக, மனைவியை அடித்து துன்புறுத்தியும், சூடு வைத்தும் கொடுமைப்படுத்தி வந்து உள்ளார்.

நேற்று, தீக்காயங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக, புதுால் மருத்துவமனை செல்லும்போது, அருகில் வசிப்பவர்களுக்கு மேற்கண்ட சம்பவம் தெரியவந்தது. அதையடுத்து, அவர்கள் கும்மிடிபூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று, புதுாலை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து, ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.

Advertisement