கால்வாயில் விழுந்து பால் வியாபாரி சாவு
புதுச்சேரி : வாய்காலில் தவறி விழுந்த வியாபரி இறந்தார்.
கருவடிக்குப்பம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முருகையன், 55; பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை பால் கறக்க சென்றவர், கென்னடி நகர் கால்வாயில் தவறி விழுந்து கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement