ரோடு பணியில் இடிக்கப்பட்ட நிழற்குடை; மீண்டும் அமைக்காததால் மக்கள் அவதி

குஜிலியம்பாறை : குஜிலியம்பாறை கரூர் மெயின் ரோடு இரு வழி சாலையாக இருந்த நிலையில் முதற்கட்டமாக தொட்டனம் பட்டியிலிருந்து குஜிலியம்பாறை, பாளையம், டி.கூடலுார் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது.

அப்போது ரோட்டோரம் இருந்த பூசாரிபட்டி பிரிவு, தண்ணீர் பந்தல், வெள்ளம்ப்பாறை, கரும்பாறைப்பட்டி நிழற்குடைகள் அகற்றப்பட்டன. ரோடு பணிகள் முடிந்து ஒராண்டு ஆன நிலையில் நிழற்குடை இன்னும் அமைக்கவில்லை.

இதனால் மக்கள் மழை வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பகுதி மக்களின் நலன் கருதி நிழற்குடைகளை விரைந்து அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

Advertisement