ரூ.1.06 கோடிக்கு பேட்டரி வண்டிகள்

வடமதுரை : வடமதுரை ஒன்றிய ஊராட்சிகளுக்கு தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மைக்காக தலா ரூ.2.80 லட்சத்தில் ரூ.1.06 கோடி மதிப்புள்ள 38 பேட்டரி வண்டிகள் வழங்கும் விழா நடந்தது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி, தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், ஒன்றிய அவைத் தலைவர் முனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், இளங்கோ பங்கேற்றனர்.

Advertisement