சிங்கம்புணரியில் இன்று வைகாசி தேரோட்டம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று நடக்கிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் நாளான நேற்று புரவி எடுப்பு நடந்தது. மாலை 6:30 மணிக்கு புரவி பொட்டலில் இருந்து ஐயனார் புரவி சந்திவீரன் கூடத்திற்கு எடுத்துவரப்பட்டது. கோயிலில் இருந்த வெண்கல புரவியும் கொண்டுவரப்பட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இரவு 9:00 மணிக்கு 2 புரவிகளும் கடைவீதி வழியாக கோயிலை அடைந்தன. 9ம் நாளான இன்று தேரோட்டம் நடக்கிறது. இன்று காலை 9:00 மணிக்கு பூரணை, புட்கலை தேவியருடன் சேவுகபெருமாள் ஐயனார் திருத்தேரிலும், பஞ்ச மூர்த்திகள் சப்பரங்களிலும் எழுந்தருள்கின்றனர். மாலை 4:00 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். நாளை (செவ்வாய்) இரவு பூப்பல்லக்கு நடைபெறும்.

Advertisement