நுாறு நாள் பணி துவக்கி வைப்பு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் வாய்கால் துார்வாரும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஏரிப்பாக்கம், கரையாம்புத்துார், கரியமாணிக்கம், மடுகரை, மணமேடு, நெட்டப்பாக்கம், சூரமங்கலம், கல்மண்டபம் பஞ்சாயத்துகளில் ரூ. 3கோடி செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி, குளம், உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் துார்வாரப்பட உள்ளன. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திக்கேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சம்பத், பணி ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மகளிர் உரிமை தொகை ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம்
-
சென்னை டிரையத்லான் நீச்சல் போட்டி இந்திய வீரர் - வீராங்கனையர் சாதனை
-
குத்துச்சண்டை விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரம்
-
தபால் நிலையங்களில் விபத்து காப்பீடு முகாம்
-
சிவகங்கையில் 11 மினி பஸ்கள்
-
கேரள அரசு பஸ்களில் கூரியர் சேவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் நறுமணப் பொருள் வியாபாரிகள் கோரிக்கை
Advertisement
Advertisement