இஸ்ரேல் தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு பொறுப்பு ஏற்க வேண்ம்: ஈரான் கண்டனம்

டெஹ்ரான்: '' இஸ்ரேல் அத்துமீறலுக்கு ஜி7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்,'' என ஈரான் தெரிவித்து உள்ளது.
கனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில், மத்திய கிழக்குப் பகுதிகளில் பதற்றம் தணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தன்னை தற்காத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனக்கூறப்பட்டது.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இஸ்ரேலின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு செயலுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள 3 நாடுகள் அடங்கிய ஜி 7 அமைப்பு தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பொது மக்களின் வீடுகள், பொதுச் சொத்துகள் மற்றும் அரசு கட்டமைப்புகள் மோசமாக சேதமடைந்துள்ளன. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. இந்த கொடூர ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை ஈரான் தற்காத்து கொள்கிறது. இதனைத்தவிர ஈரானுக்கு வேறு வாய்ப்புஏதும் இல்லை. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உடனடியாக முடிவு கட்டினால் மட்டுமே இந்த பிராந்தியத்தில் நிலைமை ஸ்திரத்தன்மை பெறும். இவ்வாறு ஈரான் கூறியுள்ளது.
மேலும்
-
மக்கள் நல அரசு வெறும் வார்த்தையா? டாஸ்மாக் வழக்கில் ஐகோர்ட் காட்டம்
-
கும்மிடிப்பூண்டியில் கலெக்டர் சோதனை
-
உதவிய பஸ் டிரைவர் உயிரிழந்த பரிதாபம்
-
அரசு தொடக்கப்பள்ளி வளாகம் அருகே இடியும் அபாய நிலையில் குடிநீர் தொட்டி
-
மேல்நிலை பள்ளியில் மகளிர் உயர்நிலை பள்ளி பெற்றோர் அதிருப்தி
-
நெரிசலால் தினம் தினம் அவதி ரவுண்டானா அமைப்பதே தீர்வு