சமாதியால் நிரம்பும் சுடுகாடு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு கிராமத்தில் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கூடல்வாடி பட்டரை ஏரி அருகே சுடுகாடு அமைக்கப்பட்டுஉள்ளது.
கிராமம், காலனி என, இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பலரும், புதைக்கும் இடத்தில் சமாதி எழுப்பியுள்ளனர். இதனால், சடலங்களை அடக்கம் செய்ய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், சுடுகாட்டை சுத்தம் செய்தபோது, 'பாழடைந்த சமாதிகளை அகற்றி, புதிதாக யாரும் சமாதி அமைக்கக் கூடாது என, அறிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதுகுறித்து வருவாய் மற்றும் ஊராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளலுாரில் ரோடு படுமோசம் பொறுமையிழந்த மக்கள் மறியல்
-
குறைதீர் முகாமில் எஸ்.பி., மனுக்கள் பெற்றார்
-
சவாரிக்கு அழைத்துச் சென்று வடமாநிலத்தவரிடம் வழிப்பறி ஆட்டோ ஓட்டுனர்கள் மூவர் கைது
-
சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் குறித்து ஆய்வு
-
பழுதாகி நின்ற மினி பஸ் போக்குவரத்து நெரிசல்
-
நில அளவை பயிற்சி மையம்
Advertisement
Advertisement