சமாதியால் நிரம்பும் சுடுகாடு கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

திருவாலங்காடு:திருவாலங்காடு கிராமத்தில் இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் கூடல்வாடி பட்டரை ஏரி அருகே சுடுகாடு அமைக்கப்பட்டுஉள்ளது.

கிராமம், காலனி என, இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பலரும், புதைக்கும் இடத்தில் சமாதி எழுப்பியுள்ளனர். இதனால், சடலங்களை அடக்கம் செய்ய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், சுடுகாட்டை சுத்தம் செய்தபோது, 'பாழடைந்த சமாதிகளை அகற்றி, புதிதாக யாரும் சமாதி அமைக்கக் கூடாது என, அறிவிக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இதுகுறித்து வருவாய் மற்றும் ஊராட்சி துறை சார்ந்த அதிகாரிகள் தகுந்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement