சிறுமிக்கு பிரசவம் இளைஞர் மீது போக்சோ

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, பிளஸ் 2 படித்து வந்தார். தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஜவஹர்ராஜா 21. இருவரும் காதலித்துள்ளனர்.

ஜவஹர்ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை வரவழைத்து தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஜூன் 6ல் சிறுமி வயிறு வலிப்பதாக தெரிவித்தார். அவரது தாயார் பெரியகுளம் அரசுமருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றார். பரிசோதித்த டாக்டர் சிறுமி 7 மாதம் கர்ப்பம் என தெரிவித்தார்.

அன்றைய தினம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை எடை குறைவாக இருந்தததால் சிறுமி, குழந்தையும் தீவிர சிகிச்சைக்கு தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பினர். சிறுமியின் தாயார் புகாரில், ஜவஹர்ராஜா மீது பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.-

Advertisement