ரூ. 1 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பி திருட்டு
வானுார் : வானுார் அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வானுார் அடுத்த துருவை கிராமத்தில் இருந்து புள்ளிச்சப்பள்ளம் செல்லும் சாலையில், மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. கடந்த 16ம் தேதி, டிரான்ஸ்பார்மரை ஆப் செய்த மர்ம நபர்கள், அதிலிருந்த பெட்டியை உடைத்து காப்பர் கம்பிகளை திருடிச் சென்றனர்.
திருச்சிற்றம்பலம் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து உதவி மின் பொறியாளர் தமிழ்செல்வி, ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, காப்பர் கம்பியை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியாது; ஏர் இந்தியா விபத்துக்கு வருத்தம் தெரிவித்த டாடா குழு தலைவர்
-
முருக பக்தர்கள் மாநாடு வேல், மயில், ஓம் சட்டை
-
மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் 'பளீச்' துாய்மை பணியில் நகராட்சி ஊழியர்கள்
-
தீ பந்தம் காட்டும் போராட்டம்
-
இன்று இனிதாக பொள்ளாச்சி
-
விதிமீறல் வாகனங்கள்; குறையாத நெரிசல் தளி ரோட்டில் தத்தளிப்பு
Advertisement
Advertisement