புது வீடு கட்டியாச்சு மின் இணைப்பு என்னாச்சு
சோழவந்தான்: சோழவந்தான் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான கட்டுமான பணிகள் நடக்கின்றன.
வீடு, கடைகள் கட்டுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெறவும், கட்டுமானம் முடிந்து நிரந்தர மின் இணைப்பு பெறுவதற்கும் மீட்டர்கள் பற்றாக்குறையால் தாமதம் ஏற்படுகிறது.
இதனால் கட்டுமான பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் பண இழப்பு ஏற்படுகிறது என மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது, ''மின் இணைப்பு பெறுவதற்கு ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
வரிசைப்படி மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.மீட்டர்கள் கொள்முதல் பணிகளில் சுணக்கம் ஏற்படுவதால் மின் இணைப்பு வழங்குவதற்கு தாமதமாகிறது'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை மாநாடு கந்த சஷ்டி கவச பாடல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்தது
-
அகோபிலமடம் ஜீயர் திருநட்சத்திர விழா ஸ்ரீரங்கத்தில் கோலாகலம்
-
மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை எம்.எல்.ஏ., முற்றுகையிட்டு போராட்டம்
-
பாட்டி சாவில் திடீர் திருப்பம் கொன்ற காமுக பேரன் கைது
-
ஏர்போர்ட்டில் ரூ.3 கோடி கஞ்சா சிக்கியது
-
பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை உயிரிழப்பு
Advertisement
Advertisement