பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைப்பு

மதுராந்தகம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, மாம்பாக்கத்தில் உள்ள பேருந்து பயணியர் நிழற்குடை சீரமைக்கப்பட்டு வருகிறது.
மதுராந்தகத்திலிருந்து சித்தாமூர் வழியாக சூணாம்பேடு, செய்யூர் பகுதிகளுக்கு செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இதில், மாம்பாக்கம் பகுதியில், பேருந்து பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.
நிழற்குடையில் இருக்கைகள் சேதம் அடைந்து இருந்ததால், பயணியர் கால்கடுக்க நின்று, பேருந்தில் பயணம் செய்து வந்தனர்.
பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, மதுராந்தகம் நகராட்சி பொது நிதியின் வாயிலாக, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பயணியர் நிழற்குடையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக கமலுக்கு அழைப்பு
-
கோவை, நீலகிரியில் இன்று கனமழை
-
மின் கணக்கீட்டு அட்டைக்கு 'குட்பை'; கட்டண விபரம் இனி செயலியில் வரும்
-
பருத்திக்கு உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை
-
முதனை கிராம விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை முகாம்
-
'சைபர்' அடிமையாக்கும் மர்ம கும்பல்; சென்னையில் போலி 'கால் சென்டர்'
Advertisement
Advertisement