யாரப் தர்காவில் சந்தன குட ஊர்வலம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள பழ-மையான, யாரப் தர்காவில் சந்தன குட ஊர்வலம் நேற்று முன்-தினம் நடந்தது.

யாரப் தர்காவில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் தர்காவில் சென்று நிறைவு பெற்றது. அதன் பின் பூ அலங்காரம், சந்தன பூச்சு, பாத்தியா நடந்தது.தொடர்ந்து, யாரப் தர்கா முத்தவல்லி முஜம்மில் பாஷா, செய-லாளர் மகபூப்கான் ஆகியோர் மூலம் கொடியேற்றம் நடந்தது. தர்கா நிர்வாகம் சார்பில், தப்ருக் (பிரசாதம்) வழங்கப்பட்டது. இஸ்லாமிய மற்றும் ஹிந்து மக்கள் பங்கேற்றனர். அடுத்த மாதம், 23, 24 ஆகிய இரு நாட்கள், சந்தன குட உருஸ் திருவிழா நடக்கி-றது.

Advertisement