ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் வசிப்பவர் மதுசூதனன், இங்குள்ள, வட மாநில மடம் ஒன்றின் மேலாளர். இவருக்கு, ஐந்து குழந்தைகள். இதில் ஸ்ரீனிவாசன், 10, என்ற மகனும் இருந்தார். 23ம் தேதி, விளையாட சென்ற ஸ்ரீனிவாசன், வீடு திரும்பவில்லை.

மதுசூதனன் புகாரில், ஸ்ரீரங்கம் போலீசார் விசாரித்து, அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். நேற்று முன்தினம், கொள்ளிடம் ஆற்றில் மிதந்த சிறுவன் ஸ்ரீனிவாசன் உடலை போலீசார் மீட்டு விசாரிக்கின்றனர்.

Advertisement