சிறுமி தற்கொலை விவகாரம் தாய் உட்பட இருவர் மீது வழக்கு

குளித்தலை: குளித்தலை அடுத்த, பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த ஜெயமணி, 38, என்பவரின் மகள் மிகாசினி, 17, குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 25 மதியம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இறந்ததை யாருக்கும் தெரிவிக்காமல்,


பிரேதத்தை மயானத்துக்கு கொண்டு சென்று எரித்து விட்டனர். இதையடுத்து, வி.ஏ.ஓ., சஞ்சீவி கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் ஜெயமணி, உறவினர் ஸ்ரீரங்கன், 75. ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement