பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி

டாவோ: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
பிலிப்பைன்ஸின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள டாவோ மாகாணத்தின் 70 கி.மி., தொலைவில் 101 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடவில்லை.
இந்த நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கின. இதனால், பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்தபடி வெளியேறி, வீதியில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் குறித்து மீட்புத்துறையினர் கூறுகையில்,"பெரியளவில் எந்த பாதிப்பும் இல்லை. சுமார் 5 வினாடிகளுக்கு மேஜைகள், கம்ப்யூட்டர்கள் குலுங்கின. இதுவரையில் எந்த உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ பற்றி ஏதும் பதிவாகவில்லை," என தெரிவித்தார்.
கடந்த ஜூன் 24ம் தேதி தெற்கு பிலிப்பைன்ஸில் 6.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
சென்னை ஐ.ஐ.டி., மாணவி பாலியல் வழக்கு; மகளிர் ஆணையம் விசாரணை
-
கோர்ட்டில் ஆர்ப்பாட்டம் செய்தவர் மீது வழக்கு
-
பாஸ்போர்ட் அலுவலக பணியாளர்களுக்கு விருது
-
சிங்காநல்லுாரில் கட்டட கழிவை கொட்ட வேறிடம்; மாநகராட்சி முடிவு
-
'தி.மு.க.,ஆட்சி முடியும் முன் வாக்குறுதி நிறைவேற்றணும்'
-
'செவி வழி செய்திகளை அரசியல் தலைவர்கள் பேசாதீங்க... ப்ளீஸ்!'